
திருச்சி பாலக்கரையில்
அகில இந்திய இமாம்கள் கவுன்சில் ஆர்ப்பாட்டம்
மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு.
குஜராத் இனப்படுகொலையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பல்கீஸ் பானு வழக்கில் குற்றவாளிகளின் விடுதலை,இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்கிற தலைப்பில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மண்டல தலைவர் மெளலானா அப்துல் கஃபூர் மன்பயீ தலைமையில் திருச்சி பாலக்கரையில் நடைபெற்றது.
ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில செயலாளர் மெளலானா. அப்துல்லாஹ் தொகுத்து வழங்கினார். ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில செயற்குழு உறுப்பினர் மெளலானா ஹாஃபிழ் அப்துல் காதிர் ஜைனி கண்டன கோஷத்தை எழுப்பினார். அதனைத் தொடர்ந்து.
ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில பொதுச்செயலாளர் மெளலானா அர்ஷத் அஹ்மது அல்தாஃபி, பாப்புலர் ஃப்ரண்டின் திருச்சி மாவட்ட தலைவர் .ஷஃபியுல்லாஹ், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருச்சி மண்டல தலைவர் இமாம் ஹஸ்ஸான் ஃபைஜி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். இமாம்கள் மற்றும் ஜமாத்தார்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் மெளலானா ஷேக் ஸஆதி நன்றி கூறினார்.

