திருச்சி வயலூர் சாலை ஸ்ரீனிவாசன் நகர் பிரதான சாலையில் வசித்து வருபவர் ஷாம் கோகுல் (வயது 24). இவர் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் குழுமாயி அம்மன் கோவில் அருகே வந்து வந்து கொண்டிருந்த போது புத்தூர் ஸ்ரீனிவாசன் நகர் பகுதியை சேர்ந்த பாண்டி என்கிற முத்துப்பாண்டி (24), பிரகாஷ் (22) என்ற இரண்டு வாலிபர்களும் ஷாம் கோகுலை கீழே தள்ளி அவரை தாக்கி அவரிடம் இருந்து செல்போனை பறித்து சென்றுள்ளனர்.

இது குறித்து ஷாம் கோகுல் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று காவல்துறையினர் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.