திருச்சி காவிரி பாலத்தில்
அடையாளம் தெரியாத முதியவர் பிணம்.
திருச்சி காவிரி ரயில்வே பாலத்தில் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடந்தது.
இதுகுறித்து திம்மராய சமுத்திரம் கிராம நிர்வாக அதிகாரி குமார் திருவரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக
திருவரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? கொலையா? தற்கொலையா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.