ஓ பன்னீர்செல்வம் சுயநலத்திற்காக ஜாதியை பயன்படுத்துகிறார்.
திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் ப.குமார் பேட்டி.
திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில், மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.பி.,யுமான ப.குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது;-
ஓ பன்னீர்செல்வம் தான் சார்ந்த முக்குலத்தோர் சமுதாயத்திற்கு எந்த காலத்திலும் ஒரு நன்மையும் செய்ததில்லை.
முக்குலத்தோருக்கு ஆதரவாக இருப்பவர் என்றால், அவர் சாதியை சார்ந்த சசிகலாவை முதல்வராக்க விடாமல் தடுத்து, தர்மயுத்தம் செய்தது ஏன்?
தற்போது அதிமுகவில், 19 முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மாவட்ட செயலாளர்களாக உள்ளனர். அவர்களில், 2 பேர் தவிர மற்ற, 17 பேரும் எடப்பாடியின் தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

எடப்பாடி பழனிச்சாமி, ஜாதி மதம் பாராமல் பணியாற்றுவார் என்று உறுதியாக நம்புகிறோம்.
ஓபிஎஸ், சசிகலா, டிடிவி ஆகியோர் தொண்டர்களின் செல்வாக்கை இழந்து விட்டனர். மக்களின் ஆதரவும் அவர்களுக்கு இல்லை.
ஒட்டுமொத்த
தொண்டர்களின் ஆதரவும் எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் உள்ளது. 95 சதவீத தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் உள்ளனர்.
உதிரிகள் மட்டுமே ஓபிஎஸ் பக்கம் உள்ளனர்.
பன்னீர் செல்வமும் அவரது மகனும் திமுகவுடன் நேரடியாகவே தொடர்பு வைத்துள்ளதும்,
திமுகவை வெளிப்படையாக பாராட்டுவதை கண்டும் தொண்டர்கள் கொந்தளித்து போய் உள்ளனர்.
வரும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். மீண்டும் தமிழகத்தில் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைக்கும்.
ஓபிஎஸ், தினகரன், சசிகலா சுற்றுப் பயணங்களால் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.