Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மத்திய சிறையில் கொலை வழக்கில் கைதான ஆயுள் தண்டனை கைதி திடீர் சாவு.

0

'- Advertisement -

திருச்சி மத்திய சிறையில் கொலை வழக்கில் கைதான
ஆயுள் தண்டனை
கைதி திடீர் சாவு.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் என்கிற ராமசாமி. ( வயது 79) -இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு கொலை வழக்கில் கீரமங்கலம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் திடீரென அவருக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டது. உடனே அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து திருச்சி மத்திய சிறை அதிகாரி சண்முகசுந்தரம் கொடுத்த புகாரின் பெயரில் கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.