திருச்சி அரியமங்கலத்தில்
வீட்டு படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தவர் சாவு.போலீசார் விசாரணை
திருச்சி அரியமங்கலம் தெற்கு உக்கடை ஐஸ் கம்பெனி தெருவைச் சேர்ந்தவர் சிக்கந்தர் பாஷா (வயது52). சம்பவத்தன்று இவர் தெற்கு உக்கடை மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள தாய் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக வீட்டு படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தார்.உடனே அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .
ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.