
திருச்சி
பிளஸ்-1 மாணவி மற்றும் மூதாட்டி மாயம்
போலீசார் விசாரணை.
திருச்சி பாலக்கரை கீழப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவராமன்.இவரது மகள் பிரியா. ( வயது 17).
இவர் கரூர் மாவட்டம் தரகம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற பிரியா வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மாமா பெரியசாமி கொடுத்த புகாரின் பெயரில் பாலக்கரை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் திருச்சி பொன்நகர் காமராஜ புரத்தைச் சேர்ந்த மூக்கன் மனைவி விஜயா ( வயது 64) என்ற மூதாட்டியை காணவில்லை.
இது குறித்த புகாரின்பேரில் செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

