திருச்சி 54வது வார்டில் தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிடும் ராமமூர்த்தியே வெற்றி பெறுவார், அப்பகுதி பொதுமக்கள்.
திருச்சி மாநகராட்சி 54வது வார்டில் தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ராமமூர்த்தி வெற்றி வாய்ப்பு அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருச்சி மாநகராட்சி 54வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் ராமமூர்த்தி போட்டியிடுகிறார்.
ஏற்கனவே 2 முறை மாமன்ற உறுப்பினராக இருந்தவர் ராமமூர்த்தி.
இதனால் வார்டில் உள்ள மூலை முடுக்குகள் அனைத்தும் இவருக்கு அத்துபடி. பதவியில் இருந்தபோது மக்களுக்கு இவர் செய்த சேவைகள் காரணமாக வார்டு மக்கள் முன்வந்து மாநகராட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் படி வற்புறுத்தினர்.
மக்களுக்காக மக்கள் பணி ஆற்ற ராமமூர்த்தி சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
வேட்புமனு தாக்கல் செய்தவுடன் இவருக்கு தேர்தல் ஆணையம் தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்தது.
இதைத் தொடர்ந்து தினமும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். வீடு வீடாக சென்று தேர்தல் வாக்குறுதிகளை துண்டு பிரசுரமாக வழங்கி அவர் வாக்கு சேகரித்து வருகிறார்.
மேலும் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய மாநகராட்சியில் போராடுவேன் என்று வாக்குறுதி அளித்து பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த வகையில் சின்னமிளகுபாறை,பெரிய மிளகுபாறை பகுதிகளில் ராமமூர்த்தி வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கி தீப்பெட்டி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
ஏராளமான வார்டு மக்கள், இளைஞர்கள், பெண்கள் அவருடன் வாக்கு சேகரிக்கும் பணியிலும் தேர்தல் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
மக்கள் ஆதரவு காரணமாக குறுகிய நாளில் நாட்களிலேயே தீப்பெட்டி சின்னம் 54வது வார்டு முழுவதும் பிரபலமாகி விட்டது.
மக்களாகவே முன்வந்து ராமமூர்த்திக்கு ஆதரவாக தேர்தல் பணியில் ஈடுபட்டு இருப்பது சுயேட்சை வேட்பாளர் ராமமூர்த்தியின் வெற்றியை உறுதி செய்து உள்ளது.
இந்த வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புஷ்பராஜ் நான்காவது இடத்தை பிடிப்பார் என கூறப்படுகிறது.
பொது சேவை செய்துவரும் பாரதிய ஜனதா வேட்பாளர் மற்றும் தேமுதிக வேட்பாளர் இரண்டாவது மூன்றாவது இடத்தை பிடிப்பார்கள் என அப்பகுதி பொதுமக்களே கூறுகின்றனர்.