Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள்: அதிமுக மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி அறிக்கை.

0

'- Advertisement -

 

 

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

Suresh

பேரறிஞர் அண்ணாவின் 53 வது நினைவு தினமான (3.2.2022- வியாழக்கிழமை) அன்று

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களுடைய திருவுருவச் சிலைக்கு அல்லது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அதுசமயம் அந்தந்த பகுதிகளில் உள்ள தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை, வார்டு கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

என முன்னாள் அமைச்சரும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளருமான மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

 

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.