தேர்தல் முன்விரோதம்.
தி.மு.க. கவுன்சிலர் மகனை தாக்கிய
2 வாலிபர்கள் கைது.
திருச்சி ஸ்ரீரங்கம் கீழ தேவ தானம் பகுதியைச் சேர்ந்தவர் தசரத ராஜ். இவரது மனைவி தங்க லட்சுமி.இவர் நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில் 15வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்தநிலையில் தேர்தல் முன்விரோதம் காரணமாக அப்பகுதியை சேர்ந்த பிரசாத் ,சுதர்சன் ஆகிய இரண்டு வாலிபர்களும் கவுன்சிலர் தனலட்சுமியின் மகன் ஹரிஹர குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட ஹரிஹர குமார் ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் ஸ்ரீரங்கம் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து இரண்டு வாலிபர்களையும் கைது செய்தார்.
இவர்கள் மீது கோட்டை காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.