Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி 45வது வார்டு மக்கள் நலனுக்காக பாடுபடும் தஞ்சாயி பாலசுப்பிரமணியத்துக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் ப.குமார் பிரச்சாரம்.

0

மக்­கள் நல­னுக்­காக பாடு­ப­டு­வேன்.
திருச்சி 45 வது வார்டு அ.தி.மு.க. வேட்­பா­ளர் தஞ்­சாயி பால­சுப்­பி­ர­ம­ணி­யம் உறுதி.

திருச்சி மாந­க­ராட்சி 45–வது வார்­டில் அ.தி.மு.க. வேட்­பா­ள­ராக பொன்­மலை பகுதி அ.தி.மு.க. செய­லா­ளர் பால­சுப்­பி­ர­ம­ணி­யத்­தின் மனைவி தஞ்­சாயி  போட்­டி­யி­டு­கி­றார்.

அவரை ஆத­ரித்து 45–­வது வார்­டில் திருச்சி தெற்கு மாவட்ட அ.தி.மு.க செய­லா­ளர் ப.குமார், வீடு, வீடாக சென்று பிர­சா­ரம் செய்­தார்.

அவருக்கு பொது­மக்­கள் ஆரத்தி எடுத்து உற்­சாக வர­வேற்பு அளித்­த­னர்.

பிர­சா­ரத்­தின் போது பொது­மக்­கள் மத்­தி­யில் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் பேசுகையில்:
பகுதி செயலாளர் பாலசுப்ரமணியன் நல்லவர், பண்பாளர், சுறுசுறுப்பானவர், மக்களுக்காக உழைக்க கூடியவர். இவரது மனைவிக்கு வாக்களித்தால் இந்த வார்டை முதன்மை வார்டாக மாற்றி காட்டுவார்கள் எனவே தஞ்சாயி பாலசுப்பிரமணியத்துக்கு இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுங்கள் என கேட்டுக்கொண்டார்.

திருச்சி, மாந­க­ராட்சி  45–வது வார்டு  அ.தி.மு.க. வேட்­பா­ளர் தஞ்­சாயி பால­சுப்­பி­ர­ம­ணி­யம் கூறி­ய­தா­வது:
2011 –16 வரை (பழைய 31–வது வார்டு) கவுன்­சி­ல­ராக இருந்த போது பல கோடி ரூபாய் மதிப்­பி­லான வளர்ச்­சிப் பணி­கள் மேற்­கொள்­ளப் பட்­டுள்­ளன. நடுப்­ப­னக்­கால் தெரு மற்­றும் காவேரி நகர் பகு­தி­யில் முன்­னாள் எம்.பி. ப.குமார்  தொகுதி மேம்­பாட்டு நிதி­யில் இருந்து ரூ.6 லட்­சம் பெறப்­பட்டு ரேஷன் கடை கட்­டி­டம் கட்­டிக் கொடுக்­கப்­பட்­டுள்­ளது.

பாதாள சாக்­கடை திட்­டப் பணி­கள் முடிந்த உடன் தார்ச்­சாலை, கான்­கி­ரீட் சாலை, வடி­கால் வசதி செய்து தரப்­ப­டும்.

மஞ்­சத்­தி­டல் ரெயில்வே  கிரா­சிங்­கில் பாலம் அமைக்க முயற்­சித்­த­தன் பல­னாக பாலம் அமைக்க பூர்­வாக பணி­கள் தொடங்­கப்­பட்­டுள்­ளன.

மாவ­டிக்­கு­ளம் முழு­வ­தும் தூர்­வாரி குளத்­தின் கரையை உயர்த்தி பலப்­ப­டுத்தி குளத்­தின் மெயின்­ரோட்­டில் ஒரு பகு­தி­யில்  நடை­பாதை அமைக்க முன்­னாள் எம்.பி. குமார்  மூலம் கோரிக்கை வைக்­கப்­பட்­டது. இதை ஏற்று அப்­போ­தைய முதல்­வர் பழ­னி­சாமி ரூ.193 கோடி மதிப்­பீட்­டில் பணி­கள் மேற்­கொள்ள உத்­த­ர­விட்டு இப்­போது முடி­வ­டைந்து விட்­டன.

இம்­மு­றை­யும் என்னை வெற்றி பெற செய்­தால் ஏற்­க­னவே, கவுன்­சி­ல­ராக இருந்த போது செய்த வளர்ச்­சிப் பணி­களை போல் இந்த முறை­யும் பல்­வேறு வளர்ச்­சிப் பணி­களை செய்து மக்­கள் நல­னுக்­காக பாடு­ப­டு­வேன் என்­றார்.

Leave A Reply

Your email address will not be published.