Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் கத்தி முனையில் வழிப்பறி செய்த ரவுடி கைது

0

திருச்சியில்
கத்தியை காட்டி வழிப்பறி செய்த
ரவுடி கைது.

திருச்சி இ.பி.ரோடு கமலா நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார். இவர் அங்குள்ள முருகன் தியேட்டர் அருகாமையில் தள்ளுவண்டியில் டிபன் கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இ.பி.ரோடு சத்தியமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் என்கிற சுபாஷ் சந்திரபோஸ் ( வயது 21) என்ற வாலிபர் அவரை கத்திமுனையில் மிரட்டி ரூ 500 பறித்துச் சென்றார் .

இதுபற்றி ராம்குமார் கோட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சுபாஷ் சந்திர போசை கைது செய்தனர் .

ரவுடி பட்டியலில் இருக்கும் அவர் மீது கோட்டை காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரவுடி வசமிருந்து ஒரு கத்தி கைப்பற்றப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.