திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள
காங்கிரஸ் மாவட்ட
தலைமை அலுவலகமான
அருணாச்சல மன்றம் முன்
மகிளா காங்கிரஸ்
மாநில
பொதுச்செயலாளரும், திருச்சி
51வது வார்டு காங்கிரஸ் தலைவருமான
ஜெகதீஸ்வரி இன்று காலை
திடீர் என தரையில் அமர்ந்து தர்ணா
போராட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர் இதுகுறித்து
அவர் கூறும்போது:-
கூட்டணியில்
கொடுக்கப்பட்டுள்ள 4 கவுன்சிலர் சீட்டுகளையும் 3
மாவட்ட தலைவர்களே
எடுத்துக்கொள்கின்றனர்.
காங்கிரஸ்
கட்சிக்காக எங்களை போன்றவர்களுக்கு தொடக்கம் முதல் காங்கிரஸ் கட்சியில் உழைத்திட்ட எங்களைப் போன்றவர்களுக்குவாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை.
தலைமை மீது மரியாதை
வைத்துள்ளோம்.
4 சீட்டும் உரிய
வகையில் காங்கிரஸ் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
திருச்சி மாநகராட்சியில் காங்கிரஸுக்கு குறைந்தபட்சம் 16 வார்டுகள் ஒதுக்க வேண்டும்.
கூட்டணி ஒத்துக் கொள்ளவில்லை என்றால் உண்மையான காங்கிரஸ் நிர்வாகிகள் சுயேச்சையாக போட்டியிட தயாராக உள்ளோம்.
நான் ஏற்கனவே 51-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட முகம் பார்க்கும் கண்ணாடி சின்னம் கேட்டு மனு அளிக்க தயாராக உள்ளேன் என கூறினார்.
(தேர்தல் மனு, சான்றிதழ்கள் உடன் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது)
போக்குவரத்து மிகுந்த பகுதியில் தனியாக தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால்
பாதுகாப்புக்காக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.