தமிழக முதல்வருக்கு நன்றி அறிவித்து தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் நீலகண்டன் அறிக்கை.
அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநில பொருளாளரும் மாவட்ட செயலாளருமான சே.நீலகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்த தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்நாட்டின் ஆசிரியர்கள்,
அரசு முதல் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுகள் 01.01.2022 வழங்கப்படும் என்று அறிவித்த படியே, அகவிலைப்படியை 17% லிருந்து 31% மாக உயர்த்தி வழங்கியிருக்கின்ற முதலமைச்சர் அவர்களுக்கு எம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த அறிவிப்பு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களிடையே பெரும் மகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
போராட்டக்காலத்தை
பணிக்காலமாக மாற்றி, தாங்கள் பிறப்பித்த ஆணையைத் தொடர்ந்து, அகவிலைப்படி மற்றும் C மற்றும் D பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு அறிவிப்பு, முத்தமிழறிஞர் கலைஞர் போல அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் மீது தாங்கள் வைத்திருக்கும் அன்புக்கு உள்ளம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் மதிக்கின்ற அரசாக, அவர்களது பணியை பாராட்டுகின்ற அரசாக இருக்கின்றது என்றால் அது மிகையாகாது.
தேர்தல் அறிக்கையில் தாங்கள் தெரிவித்துள்ள நீண்ட நாள் மற்றும் வாழ்வாதார கோரிக்கைகளான பழைய ஓய்வூதியத்திட்டம் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை சரிசெய்தல் ஆகிய அறிவிப்பை விரைவில் வெளியிட்டு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் வாழ்வில் ஒளியேற்றும் படி கேட்டுக் கொள்கிறேன்.
இவையனைத்தும் விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையை தமிழக முதல்வர் அவர்களின் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு ஏற்படுத்தி உள்ளது.
என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் நீலகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.