திருச்சியில் கர்நாடக போலீசிடம் மாட்டி விட்ட பெண்ணை தாக்கியவர் கைது.
திருச்சி பெரிய செட்டி தெருவில் வசித்து வருபவர் மாதவராஜ் (வயது 70). இவரின் தம்பி கிருஷ்ணமூர்த்தியும், அவரது மனைவி புவனேஸ்வரி (வயது 44) என்பவரும், இவரின் வீட்டு மாடியில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் மாதவராஜ் மீது பெங்களுருவில் உள்ள குற்ற வழக்கு தொடர்பாக சம்மன் கொடுப்பதற்காக கர்நாடக போலீசார் மாதவராஜை தேடி வந்துள்ளனர்.
அப்பொழுது சம்மனை வாங்குவதை தவிர்ப்பதற்காக, புவனேஸ்வரி வீட்டுக்குள் வந்து மாதவராஜ் பதுங்கி உள்ளார். இதனை புவனேஸ்வரி கண்டிக்கவே அவரை மாதவராஜ் தாக்கியுள்ளார்.
இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் மாதவராஜ் கைது செய்யப்பட்டார்.