Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் இரு வேறு சம்பவங்களில் கல்லூரி மாணவி மற்றும் பட்டதாரி வாலிபர் திடீர் மாயம்.

0

1.
திருச்சியில் பட்டதாரி இளைஞர் திடீர் மாயம்

திருச்சி சின்ன மிளகுபாறை பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மகன் சுரேஷ்பாபு (வயது 30 )பி.காம். பட்டதாரி. இவர் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு திருப்பூர் செல்வதாக கூறி சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர் .ஆனால் எந்த தகவலும் இல்லை. இதற்கிடையே அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் மர்ம நபர்கள் அவரை கடத்திச் சென்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி சத்தியமூர்த்தி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் அகிலா வழக்குப்பதிவு செய்து மாயமான சுரேஷ் பாபுவை தேடி வருகிறார்.

2 .
கல்லூரி சென்ற மாணவி திடீர் மாயம்

திருச்சி சங்கிலியாண்டபுரம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மகள் லீலா வினோதினி( வயது 19). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி .காம் .படித்து வந்தார். வழக்கம்போல் நேற்றைய தினம் கல்லூரிக்கு புறப்பட்டு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகளில் விசாரித்து பார்த்தனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையே சிவகுமார் என்ற வாலிபருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வாலிபர் வினோதினியை கடத்திச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி பார்த்திபன் பாலக்கரை போலீசில் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்குப்பதிவு செய்து வினோதினியை தேடி வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.