திருச்சி அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு திமுக அரசை கண்டித்து நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டம் கூறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். (ஆர்ப்பாட்டம் 11ம் தேதி சனிக்கிழமை நடைபெறயுள்ளது)
மாவட்ட அவைத்தலைவர் பிரின்ஸ்..தங்கவேல். தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட இணைச் செயலாளர் இந்திராகாந்தி, சமயபுரம் சின்னையன், மாவட்ட பொருளார் சேவியர், முன்னாள் அமைச்சர்கள் டி.பி.பூனாட்சி, ப.அண்ணாவி,
முன்னாள் மாவட்ட கழக செயலாளர் சுப்பு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முசிறி ரத்தினவேல், கழக இளைஞரணி மாநில இணை செயலாளர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி கழக செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.