Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

.எம்ஜிஆரின் 34வது நினைவு நாள்: மாநகர மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் அறிக்கை.

0

முன்னாள் அமைச்சரும்,
திருச்சி மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு. செயலாளருமான வெல்லமண்டி.ந. நடராஜன் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:


அதிமுக ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சி துணை தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி K.பழனிச்சாமி ஆணைக்கிணங்க, திருச்சி பொறுப்பாளரும், மண்டல துணை ஒருங்கிணைப்பாளருமான ஆர்.வைத்திலிங்கம், வழிகாட்டுத்தளின்படி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற நிறுவனத் தலைவர் டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 34-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வருகின்ற 24-12-2021-ம் தேதி வெள்ளிக் கிழமை காலை 10.00 மணி அளவில் திருச்சி கோர்ட் அருகிலுள்ள எம்.ஜி.ஆர். திருஉருவ சிலைக்கு

திருச்சி மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு. சார்பாக மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்படும்.

அதுசமயம் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாவட்ட செயலாளர்கள், முன்னாள் மாவட்ட பகுதி நிர்வாகிகள், மாவட்ட வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.ஜி.ஆர். மன்றம், அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்க பேரவை,

வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, இலக்கிய அணி, மருத்துவ அணி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி,

இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறையை சேர்ந்தவர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவினை சேர்ந்தவர்கள். வர்த்தக அணி, கலை பிரிவு, Ex.உள்ளாட்சி தலைவர்கள், பிரதிநிதிகள், Ex.கோட்டத் தலைவர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குநர்கள்,

தலைமை கழக பேச்சாளர்கள், செயல்வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோன்

என வெல்லமண்டி நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.