Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் மாயம்.

0

'- Advertisement -

திருச்சியில் 2 பெண்கள் உள்பட
4 பேர் மாயம்.

1.
அரியலூர் காரப்பாக்கம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மதிவாணன். இவரது மகள் பாலசுந்தரி. எம்.எஸ்.சி.எம்.பில் பட்டதாரி. இவர் திருச்சியில் ஒரு தனியார் கம்பெனியில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை மதிவாணன் கொடுத்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2.
மற்றொரு பெண் மாயம்

Suresh

திருச்சி ஏர்போர்ட் முஸ்லீம் தெருவைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மனைவி கவிதா. சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3.
கார் வியாபாரி

திருச்சி பாலக்கரை கெம்ஸ்டவுண் பகுதியை சேர்ந்தவர் குமார் ( வயது 69) பழைய கார்களை வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மகன் விக்னேஷ் கோகுல் கொடுத்த புகாரின்பேரில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

4.
பாலக்கரை செங்குளம் காலனியைச் சேர்ந்த ஆரோக்கிய அந்தோணி மகன் அருண்குமார் ( வயது 28) என்பவரை காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரிலும் பாலக்கரை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.