Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் முதியவர் மற்றும் டிராவல்ஸ் அதிபர் தற்கொலை.

0

'- Advertisement -

1.
திருச்சி காந்தி மார்க்கெட்டில் முதியவர் தீக்குளித்து சாவு.

திருச்சி காந்தி மார்க்கெட் தாரநல்லூர் கே .கே .பி. பில்டிங் பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன்.( வயது 58) இவர் தனது வீட்டை பூட்டி கொண்டு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அப்போது உடல் கருகி துடிதுடித்து பரிதாபமாக இறந்தார் .இதுகுறித்து அவரது மகன் சரவணன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து வழக்கு பதிந்து காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2.
டிராவல்ஸ் அதிபர் தற்கொலை.

திருச்சி கருமண்டபம் ஆல்பா நகர் விஸ்தரிப்பு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்.( வயது 58).
இவர் திருச்சியில் தனியார் டிராவல்ஸ் நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன அழுத்தத்தில் இருந்த அவர் வீட்டில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3.
இரும்பு கடை தொழிலாளி தவறி விழுந்து சாவு

மற்றொரு சம்பவத்தில் பாலக்கரை காஜாபேட்டை மதுரை வீரன் கோவில் தெருவைச் சேர்ந்த டால் மாணிக்கம் என்பவர் தவறி கீழே விழுந்ததில் காயம் அடைந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இவர் இரும்பு கடை ஒன்றில் லோடு மேனாக வேலை பார்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.