பொன்மலை, அரியமங்கலத்தில்
தொழிலாளர்களிடம் வழிப்பறிக் கொள்ளை. 4 பேர் கைது. -ஆயுதங்கள் பறிமுதல்.
திருச்சி மேலகல்கண்டார் கோட்டை தமிழர் தெருவைச் சேர்ந்தவர் செந்தமிழன்.( வயது 42) டெக்கரேசன் தொழில் செய்து வருகிறார். இவர் திருச்சி மேலகல்கண்டார் கோட்டை பஸ் ஸ்டாப் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஒருவர் கத்தி முனையில் பணத்தை பறித்து விட்டு தப்பிச் சென்றார் .
இதுகுறித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்கு பதிந்து, பூபாலன் என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் பொன்மலைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் அருகே கொட்டப்பட்டு கௌதம் என்பவரிடம் கத்தி முனையில் பணத்தை பறித்ததாக செந்தில்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் அரியமங்கலத்தைச் சேர்ந்த அய்யனார் என்பவரிடம் பணம் பறித்ததாக ஜாகீர் உசேன் என்பவரையும், சபாலக்கரை செங்குளம் காலனியை சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் பணம் பறித்ததாக நாகராஜ் என்ற வாலிபரையும் போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து பணம், கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.