திருச்சியில் போலீசார் அதிரடி வேட்டை. கஞ்சா விற்ற 3 பேர் கைது.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து எடமலைப்பட்டிபுதூர் மில் காலனி , திண்டுக்கல் ரோடு, பெட்ரோல் பங்க் பகுதி மற்றும் ராம்ஜி நகர் செல்லும் பகுதிகளில் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் தீவிரமாக ரோந்து சென்று கண்காணித்தனர்.
இந்த சோதனையின் போது மூன்று இடங்களில் கஞ்சா விற்றதாக பரத், லட்சுமணன், பேபி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்களும், பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

