Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

30 வது நாளான இன்று அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் கை கால்களை கட்டி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

0

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் விவசாயிகள் கயிற்றினால் கை, கால்களை கட்டி நூதன உண்ணாவிரதம் போராட்டம் (10.11.2021 இன்று 30ம் நாள்)

  • மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் திகுன்னியா அருகில் பன்வீர்பூர்-ரில் விவசாயிகளை கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்

விவசாயிகள் திருச்சியில் கரூர் பைபாஸ் சாலை அருகில் உள்ள அண்ணாமலை நகர், மலர் சாலையில்

12.10.2021 முதல் 26.11.2021 வரை 46 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து

இன்று மத்திய மோடி அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்காமல், விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தருவதாக கூறிவிட்டு மோடி ஐயா தராததால், கோரிக்கைகள் அடங்கிய மனுவை எருமை மாட்டுக்கு கொடுத்து அந்த எருமை மாட்டை தலைநகரம் டெல்லிக்கு அனுப்பு வைத்து மனுவை டெல்லியில் சேர்க்க கோரி நேற்று எருமை மாட்டிடம் மனு கொடுத்தனர்.

அதனால் ஆத்திரமடைந்த மோடி கோபமடைந்து காவல்துறையை அனுப்பி விவசாயிகளின் கை கால்களை கட்டி போட்டுவிட்டார்கள் என கை கால்களை கயிற்றினால் கட்டி நூதன உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் மாநில துணைத் தலைவர் மேகராஜன், மாநில செய்தி தொடர்பாளர் பிரேம்குமார், பிரகாஷ் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.