*எஸ்.ஐ.பூமிநாதன் படுகொலை*
காவல்துறை எடுக்கும் அதிரடி நடவடிக்கை
கொலை – கொள்ளை-திருட்டில் ஈடுபடுவோருக்கு பாடமாக இருக்க வேண்டும்
பாரத முன்னேற்றக் கழகம் வலியுறுத்தல்
ஆடு திருடும் கும்பலால் திருச்சி நவல்பட்டு காவல் நிலைய எஸ். ஐ.பூமிநாதன் என்பவர் படுகொலை செய்யப்பட்டது கொடுமையான வேதனையான விசயம்.
கொல்லப்பட்ட எஸ்.ஐ.பூமிநாதன் குடும்பத்துக்கு நிதியுதவியும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அறிவித்திருப்பது ஒரு ஆறுதலான விசயம்
அதேசமயம் ஆடுகள்- கோழிகள் திருட்டு என்பது மாநிலம் முழுவதும் ஆண்டாண்டு காலமாகவே அடிக்கடி நடைபெற்று வரும் விசயமாகும்..
வருடத்திற்கு சுமார் 500 க்கும் மேற்பட்ட ஆடுகள்,ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருட்டப்பட்டே வருகின்றன.
ஆனால் இந்த ஆடு- கோழி திருடும் கும்பல் மீதான காவல்துறையின் நடவடிக்கை என்பது அங்கொன்றும் இங்கொன்றுமாகவே நடைபெறுகின்றது.
இதனால் ஆடு திருடும் கும்பல் தமது எல்லையை விரிவு படுத்தியே வருகின்றது கருதுகின்றோம்
காவல்துறையினரிடம் ஆடு திருடும் கும்பலை சேர்ந்தோர் எவரும் வசமாக சிக்காததால்
அவர்களிடையே ஏற்பட்ட குரூட்டு தைரியம் இன்று காவல்துறை அதிகாரியையே நடுரோட்டில் கொல்லும் நிலைக்கு வந்துள்ளனர்
காவல்துறையினர் துரிதகதியில் நடவடிக்கை மேற்கொண்டு எஸ்.ஐ. பூமிநாதனை கொன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
.இது ஆடு – கோழி திருடும் கும்பலுக்கு மட்டுமல்ல , செயின் , வழிப்பறி செய்வோர், கொள்ளையடிப்போர், கொலை செய்வோர் அனைவருக்கும் எச்சரிக்கையாக ஒரு பாடமாகவே இருக்க வேண்டும்.
அதேபோல் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து மாநிலத்தில் இனி எங்கும் கொலை- கொள்ளை ,வழிப்பறி, ஆடு – கோழி உள்ளிட்ட பல்வேறு திருட்டில் ஈடுபடுவோர் மீது அடிக்கடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாதவர்களின் அரசியல் கட்சியான பாரத முன்னேற்றக் கழகம் சார்பில் வேண்டுகோள் வைக்கின்றோம்
பாரதராஜா யாதவ் தலைவர்.
பாரத முன்னேற்றக் கழகம் (BMK) யாதவர்களின் அரசியல் கட்சி