POSOCO நிறுவனத்துடன் திருச்சி என்ஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்.
POSOCO நிறுவனத்துடன் திருச்சி என்ஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்.
பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் (POSOCO), ஒரு இந்திய அரசு நிறுவனமானது,
அறிவைப் பகிர்வதற்கும், பரஸ்பரம் திறனை வளர்ப்பதற்கும் கல்வியாளர்களுடன் நீண்டகால ஒத்துழைப்பிற்கு அர்ப்பணித்துள்ளது.
இது சம்பந்தமாக, POSOCO ஆல் இயக்கப்பட்டு பராமரிக்கப்படுகிற பெங்களூரு தென் மண்டல மின்பகிர்வு மையம் (SRLDC Bangalore), கல்வி-தொழில் தொடர்புகளை வலுப்படுத்துவதற்காக தேசிய தொழில்நுட்ப கழகம் திருச்சி (NITT) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட முன்வந்துள்ளது.
டாக்டர் மினி ஷாஜி தாமஸ், இயக்குனர், என்ஐடிடி, டீன் (ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை) டாக்டர் எஸ். முத்துக்குமரன், இஇஇ துறை தலைவர் டாக்டர் வி. சங்கரநாராயணன், பேராசிரியர்கள் டாக்டர். என். குமரேசன், டாக்டர் எம்.பி செல்வன், டாக்டர். எம். வெங்கட கிருத்திகா மற்றும் டாக்டர் செந்தில் அரசு மற்றும்
POSOCO இன் உதவி மேலாளர் (HR) ஜெரோம் அமிர்தராஜ் ஜே. ஆகியோர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மின் பொறியியல் பகுதியில் பணிபுரியும் ஆசிரிய உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களுக்கு நேரடி அனுபவத்தை அதிகரிக்கும் என்று டாக்டர் மினி ஷாஜி தாமஸ் குறிப்பிட்டார்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்திய மின் கட்டத்தை நிர்வகித்தல் மற்றும் இயக்குதல் ஆகியவற்றின் செயல்திறனை நிச்சயமாக மேம்படுத்தும்.
இந்தியாவின் மின்சாரத் துறை தொடர்பான பிரச்சினைகள் குறித்த ஆராய்ச்சியை ஊக்குவிப்பது, கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்வது மற்றும் SRLDC மற்றும் NITT ஆகியவற்றின் அடிப்படையில் ஆராய்ச்சிக் கட்டுரை வெளியீடுகளை ஊக்குவித்தல் எல்லாம் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பரந்த நோக்கங்கள் ஆகும்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கு, இஇஇ பேராசிரியர் டாக்டர். குமரேசன் என்.ஐ.டி இன் ஒருங்கிணைப்பாளராகவும், SRLDC, POSOCOவின் தலைமைப் பொது மேலாளர் ஸ்ரீ எஸ்.பி. குமார் SRLDC இன் ஒருங்கிணைப்பாளராகவும் இருப்பார்.