Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் இன்றைய செய்திகள். பேராசிரியருக்கு அடி உதை,இளம்பெண் மாயம்…..

திருச்சியில் இன்றைய செய்திகள். பேராசிரியருக்கு அடி உதை,இளம்பெண் மாயம்.....

0

1.
இடப் பிரச்சனையில் தகராறு.திருச்சி ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியருக்கு அடி உதை.
தனியார் மருத்துவமனை ஊழியருக்கு போலீஸ் வலைவீச்சு.

திருச்சி உறையூர் பாத்திமா நகரை சேர்ந்தவர் ஞானசேகரன்.( வயது 60). இவர் திருச்சி கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
உறையூர் நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார். தனியார் மருத்துவமனை ஊழியர். இவர்கள் இருவருக்கும் இடையே இடம் தகராறில் மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த விஜயகுமார் ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியரான ஞானசேகரனை தாக்கியுள்ளார்.
இது குறித்து அவர் உறையூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் விஜயகுமார் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

2.
திருச்சியில்
வீட்டை விட்டு வெளியே சென்ற இளம்பெண் மாயம் .
போலீசார் விசாரணை.

திருச்சி பாலக்கரை பீமநகர் புது ரெட்டி தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால். (வயது 60). இவரது மகள் வினிதா (வயது 25) -இவர் கடந்த 17ஆம் தேதி வீட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை ராஜகோபால் பாலக்கரை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்

Leave A Reply

Your email address will not be published.