Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தசரா விழா: இன்று முதல் 3 நாள் குலசை முத்தாரம்மன் கோயில் சாமி தரிசனத்துக்கு அனுமதி.

தசரா விழா: இன்று முதல் 3 நாள் குலசை முத்தாரம்மன் கோயில் சாமி தரிசனத்துக்கு அனுமதி.

0

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

6-ம் திருநாளான இன்று (திங்கட்கிழமை) முதல் 9-ம் திரு நாளான வருகிற 14-ந்தேதி (வியாழக்கிழமை) வரையிலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

தொடர்ந்து 10 முதல் 12-ம் திருவிழா நாட்களில் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 10-ம் திருநாளான வருகிற 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நள்ளிரவில் கோவில் முன்பாக பக்தர்கள் இல்லாமல் எளிமையாக நடைபெறு உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.