திருச்சியில் ரூ.1000 கோடி மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் அரச பிரபாகரன் மனு.
திருச்சியில் ரூ.1000 கோடி மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் அரச பிரபாகரன் மனு.
திருச்சியில் 1000 கோடி மோசடி. பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.
திருச்சி மண்ணச்சநல்லூர் சிறுகனூர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் அரச பிரபாகரன் தலைமையில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு மற்றும் நல சங்கத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் நேற்று நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர்,அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
திருச்சி தில்லைநகர் 10வது கிராஸ் பகுதியில் பயணம் என்ற தனியார் நிறுவனம் இயங்கி வந்தது.
அந்த நிறுவனத்தினர் தமிழகம் முழுவதும் ஆயுசு நூறு என்ற பெயரில் 1000 மளிகை கடைகளை திறக்க இருப்பதாகவும் மேலும் பல தொழில்கள் தொடங்க இருப்பதாகவும் இதற்காக கொஞ்சம் முதலீடு மட்டும் தேவைப்படுகிறது, இதில் மக்களாகிய நீங்கள் முதலீடு செய்தால் அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வட்டியாக அளிப்பதாக தெரிவித்தனர்.
ஆயிரம் பேரிடம் ரூ. 5 லட்சம் வசூல் செய்தனர். இந்த தொகைக்கு மளிகை கடை அமைத்து தருவதாக அந்த நிறுவனம் உத்தரவாதம் அளித்தது.

இதில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மில்க் ஏடிஎம் மற்றும் இட்லி மாவு தோசை போன்ற நவீன வசதிகள் ஏற்படுத்தி தரப்படும், இதற்கான பராமரிப்பினை நிறுவனமே ஏற்றுக் கொள்வதாகவும் கூறினர்.மேலும் பாரத மலர், பாரத தந்தி என பத்திரிகையும் நடத்தி மூடி விட்டனர்.
மளிகை கடை தொடங்கிய தருவதாக ரூ 1000 கோடிக்கு மேல் வசூல் செய்துவிட்டு அந்த அலுவலகத்தை திடீரென மூடிவிட்டு மூடிவிட்டனர்.
ஒரு வருடத்திற்கு மேலாகியும் கடையும் திறக்கவில்லை பணத்தையும் திருப்பித் தரவில்லை மேற்படி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் அந்த தொகையை பதுக்கி வைத்திருக்கிறார்கள்.
முதலீடு செய்த பல பேர் தற்கொலை செய்து விட்டனர் ஆகவே அப்பாவி மக்களின் அசல் தொகையை யாவது மீட்டுத்தருமாறு கேட்டுக்கொள்கிறோம் குற்றவாளிகள் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முயற்சி செய்து வருகிறார்கள்.
ஆகவே உடனடியாக எங்கள் முதலீட்டு தொகையை மீட்டுத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.