3 மகன்களையும் ராணுவத்திற்கு அனுப்பிய வீரத்தாயை நேரில் சென்று வாழ்த்திய அதிமுக மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி.
3 மகன்களையும் ராணுவத்திற்கு அனுப்பிய வீரத்தாயை நேரில் சென்று வாழ்த்திய அதிமுக மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி.
திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், எரங்குடியில் வசித்து வரும் ராஜீ – மயிலாம்பாள்
தம்பதியர் தங்கள் மகன்கள் 3 பேரையும் இந்திய இராணுவத்திற்கு அனுப்புள்ளதை கௌரவிக்கும் வகையில்
மயிலாம்பாள் அவர்களுக்கு மத்திய அரசு வீரத்தாய் விருது வழங்கி சிறப்பித்துள்ளது.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர், மு.பரஞ்ஜோதி அவர்கள்
மயிலாம்பாள் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்தி பாராட்டுக்களை தெரிவித்தார்.
உடன் மணிகண்டம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் முத்துக்கருப்பன், அற்புதம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.