சுதந்திர தினம் மற்றும் கழக அரசு100வது நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு ப இலவச புடவை,உணவு மற்றும் மருந்துகள் வழங்கினார் டாக்டர் சுப்பையா பாண்டியன்.
சித்த மருத்துவ பல்கலைக்கழகம் துவங்க உத்தரவு பிறப்பித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும்,
கழக அரசு நூறாவது நாளை முன்னிட்டும், சுதந்திர தின விழாவை முன்னிட்டும்

அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் சார்பில் கார்த்திக் சித்த வைத்தியசாலையில் பொதுமக்களுக்கு இலவச புடவை, உணவு, சளி,இருமல் சத்து மருந்துகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் டாக்டர் சுப்பையா பாண்டியன், டாக்டர். ஜான் ராஜ்குமார், ரெவரண்ட் பாதர் டேவிட் பரமானந்தம், பேராசிரியர் அருள், அன்புராஜ், டாக்டர். சகுந்தலா, டாக்டர். குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.