டாக்டர் கலைஞர் அவர்களின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு 40-வது வார்டு
எடமலைப்பட்டி புதூரில் மாவட்ட துணைச்செயலாளர் முத்துச்செல்வம்
ஏற்பாட்டில் 2000 பேருக்கு 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்…
இதனைத்தொடர்ந்து 115 அடி உயரமுள்ள இரு வண்ண கழக கொடியை ஏற்றி வைத்தார்..
பின்பு இலவச அமரர் ஊர்தியை சேவையை தொடங்கி வைத்தார்..
இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் அன்பழகன், இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், பகுதி செயலாளர் மோகன்தாஸ், சேர்மன் துரைராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.