Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பூங்கொடியில் கற்போம் எழுதுவோம் இயக்கத்தில் கற்போருக்கான மதிப்பீட்டு முகாம்

0

'- Advertisement -

பூங்குடியில் கற்போம் எழுதுவோம் இயக்கத்தில் பயிலும் கற்போருக்கான மதிப்பீட்டு முகாம்:

வட்டார வளமைய மேற்பார்வையாளர் அ.கோவிந்தராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் ,பூங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றுவரும் கற்போம் எழுதுவோம் இயக்கத்தில் பயிலும் கற்போருக்கான மதிப்பீட்டு முகாமினை அன்னவாசல் வட்டார வளமைய மேற்பார்வையாளர் அ.கோவிந்தராஜ் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Suresh

ஆய்வின் போது கொரோனா பெருந்தொற்று பரவல் சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி கற்போர் எழுதும் மையங்கள் தயார்நிலையில் உள்ளனவா என்பதை பார்வையிட்டார்.பின்னர் மையத்தில் உரிய காற்றோட்ட வசதி,போதுமான வெளிச்சம்,மாற்றுத்திறனாளி மற்றும் முதியோர் வந்து செல்லும் சாய்தள நடைபாதை,மின்சார வசதி,குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதி உள்ளனவா என்பதையும் ஆய்வு செய்தார்.கற்போர்களின் எண்ணறிவு திறன்,படித்தல் திறன் ,எழுத்தறிவு திறன் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது அன்னவாசல் வட்டார வளமைய பயிற்றுநர் மலர்விழி,பூங்குடி பள்ளி தலைமையாசிரியர் வேல்ராஜ்,தன்னார்வலர் பிரியதர்ஷினி ஆகியோர் உடன் இருந்தனர்.

அன்னவாசல் ஒன்றியத்தில் மொத்தம் 31 மையங்களில் 629 கற்போருக்கு மூன்று நாட்கள் நடைபெற்ற மதிப்பீட்டு முகாமில் அன்னவாசல் வட்டார வளமைய பயிற்றுநர்கள் அனைவரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.