“ஸ்வர்னிம் விஜய் வருஷ்“
இந்தியா – பாகிஸ்தானிடையே கடந்த 16 டிசம்பர் 1971 நடைபெற்ற போரில் இந்தியா அடைந்த பெருவெற்றியின் 50 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக
“ஸ்வர்னிம் விஜய் வருஷ்“ என்ற வெற்றிவிழாவானாது நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நாள் நம் நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது. இந்த வெற்றிவிழாவினை நாடெங்குமுள்ள மக்களிடம் கொண்டுசெல்வதன் மூலம் நாட்டு மக்களிடையே புதிய உத்வேகத்தினை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், நமது பாரதப் பிரதமர் அவர்களால், தேசிய போர் நினைவுச் சின்னத்தில் இருந்து ஏற்றப்பட்ட வெற்றி ஜோதியானது நம் நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.
குறிப்பாக, 1971 இல் நடைபெற்ற இந்தப் போரில் நம் நாட்டிற்காக இன்னுயிர் நீத்து, இராணுவத்தின் மிக உயரிய விருதுகளான பரம் வீர் சக்ரா, மஹாவீர் சக்ரா ஆகிய விருதுகளைப் பெற்ற இராணுவவீரர்களின் கிராமங்களுக்கும் இந்த வெற்றி ஜோதி கொண்டு செல்லப்படுகிறது.
இந்த வெற்றி ஜோதியானது 18.ஜூலை 2021 அன்று மதுரையில் இருந்து திருச்சிக்குக் கொண்டுவரப்பட்டது.
கல்லுக்குடியிலிருந்து இந்த வெற்றி ஜோதியை திருச்சி ராக்போர்ட் என்சிசி குரூப்ஸ் சார்பாக 4 தமிழ்நாடு கேர்ல்ஸ் பட்டாலியனின் கமாண்டிங் ஆபீஸர் பெற்றுக் கொண்டார்.
ராக்போர்ட் என்சிசி குரூப்பைச் சார்ந்த பட்டாலியன்களின் அனைத்து அதிகாரிகளும் ஜேசிஓ, என்சிஓ மற்றும் என்சிசி மாணவர்கள் அனைவரும் சாலையின் இருபுறங்கிலும் வரிசையாக நின்று தங்கள் மரியாதையைச் செலுத்தினார்கள்.
என்சிசி தலைமையகத்தில் இந்த வெற்றி ஜோதிக்கு கார்ட் ஆப் ஹானர் முறையில் இராணுவ மரியாதை அளிக்கப்பட்டு மலர் வளையம் வைத்து இன்னுயிர் நீத்த வீரர்களுக்கு நினைவு அஞ்சலி செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற என்சிசி ராக்போர்ட் குரூப்பின் தலைமை அதிகாரி குரூப்கமாண்டர் கார்னல் சி இளவரசன் இராணுவ வீரர்களின் உயிர்த்தியாகம் குறித்த வீர உரை நிகழ்த்தினார்கள்.
இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தும் பொருட்டு, இந்த வெற்றி ஜோதி அங்கிருந்து செயின்ட் ஜோசப் கல்லூரி, தேசியக் கல்லூரி ஆகிய இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டது.
வழியெங்கும் பொதுமக்களும் பல்வேறு பட்டாலியன்களின் தலைமை அதிகாரிகளும் இந்த வெற்றி ஜோதிக்குத் தங்கள் அஞ்சலியைச் செலுத்தினார்கள்.
4. இறுதியாக இந்த வெற்றிஜோதி, 19.ஜூலை 2021 , 08.30 மணி அளவில் தஞ்சாவூர் விமானப்படைத் தளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பல்வேறு யூனிட்டுகளைச் சார்ந்த என்சிசி மாணவர்கள் இந்த வெற்றிநாள் விழாவில் கலந்து கொண்டனர்.
அவர்களிடையே இந்நாள் குறித்த விழிப்புணர்பை ஏற்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.