Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழகத்தில் வேகமாகப் பரவும் கொரோனா தொற்று.17 பேர்பலி,3986 பேருக்கு தொற்று இன்று

0

'- Advertisement -

 

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தநிலையில் தற்போது கடந்த சில நாட்களாக தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 3,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9,11,110 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 17 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,821 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மேலும் 1,459 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,57,851 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 1,824 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,70,546 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தற்போது 27,743 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.