இளம்பெண் மாயம், பறவைகள் கடை சூறை, புதுப்பெண் சாவு, விவசாயி தற்கொலை. திருச்சி இன்றைய க்ரைம் செய்திகள்
1.திருச்சியில்
பறவை விற்பனை கடை சேதம்
போலீசில் புகார் .
திருச்சி தென்னூர் சாஸ்திரி ரோட்டில் பறவைகள் விற்பனை கடை நடத்தி வருபவர் கணேஷ் (வயது 47) .
அதே தென்னூர் சாஸ்திரி ரோடு பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் பாலசுப்பிரமணி, அருணாச்சலம், ராஜா, அருணாச்சலம்,மற்றும் மாலா, ஜெயலட்சுமி ஆகிய 6 பேர் சேர்ந்து கணேஷ் என்பவரது கடையை உடைத்து அங்கிருந்த பறவைகளையும் பறக்க விட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து கணேஷ் தில்லை நகர் போலீசில் புகார் கொடுத்தார் புகாரில் கடைசி சேத மதிப்பு ரூ.15 லட்சம், பறவைகளின் மதிப்பு ரூ. 2 லட்சம், பணம் 50,000 மொத்தம் ரூ.17.5 லட்சம் என கூறியுள்ளார் இதன் பேரில் 6 பேர் மீது தில்லைநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2.
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில்
தாயுடன் வந்த சிறுமி திடீர் மாயம்.கடத்தப்பட்டாரா?
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாதம்பட்டி குரல் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராஜ் இவரது மனைவி சரசு இவர்களது மகள் பிரியா ( வயது 15 ). சரசுவும், பிரியாவும் மதுரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு கள்ளக்குறிச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
முன்னதாக திருச்சி பஸ் நிலையத்தில் வந்து இறங்கினார் அப்போது தாய் சரசு சிறுநீர் கழிக்கச் சென்றார் திரும்பி வந்து பார்த்தபோது சிறுமி பிரியாவை காணவில்லை இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசில் புகார் கொடுத்தார் புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் உறையூர் காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பிச்சை என்பவரது மகன் கார்த்திகேயன் என்ற வாலிபரையும் காணவில்லை. இதுகுறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3.
திருவரங்கத்தில் பரிதாபம்
காதல் திருமணம் செய்த பெண் மின்சாரம் தாக்கி சாவு .
திருச்சி மாவட்டம் சமயபுரம் தனலட்சுமி நகரை சேர்ந்தவர் தமிழ்வாணன் இவரது மனைவி மகேஸ்வரி இவர்களது மகள் தனலட்சுமி (வயது 21). இவருக்கும் திருவரங்கம் ராம்நகர் நகர் பகுதியைச் சேர்ந்த சிக்கந்தர் பாஷா என்பவருக்கும் இடையே கடந்த 2018 ஆம் ஆண்டு காதல் திருமணம் நடந்தது இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது.
சம்பவத்தன்று கணவர் சிக்கந்தர் பாஷா வெளியே சென்றுவிட்டார் அப்போது வீட்டில் இருந்த தனலட்சுமி எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி கீழே மயங்கி விழுந்தார்.
அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவரங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் டாக்டர் இரண்டு விட்டதாக கூறி விட்டார்.
இதுகுறித்து திருவரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
4.
உறையூரில் தூக்கு போட்டு விவசாயி சாவு திருச்சி உறையூர் வள்ளலார் நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 70) விவசாயி மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார். குழந்தைகள் இல்லை இந்நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ராமச்சந்திரன் வீட்டு உத்திரத்தில் யாரும் இல்லாதபோது துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்..
இது குறித்து உறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சோனியாகாந்தி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.மற்றொரு சம்பவத்தில் அளவுக்கு அதிகமாக மது குடித்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த உறையூரை சேர்ந்த நாகேந்திரன் என்பவர் பரிதாபமாக சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த இரண்டு வழக்குகள் குறித்தும் உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.