பொன்மலையில் புதிய ரேஷன் கடை. மகேஷ் பொய்யாமொழி திறந்துவைத்தார்
பொன்மலையில் புதிய ரேஷன் கடை. மகேஷ் பொய்யாமொழி திறந்துவைத்தார்
திருச்சி தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பொன்மலை பகுதி, 31 வது வட்டம் பொன்னேரிபுரம் பகுதியில் உள்ள பொதுமக்கள், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளருமான, அன்பில் மகேஷ் பொய்யாமொழியை நேரில் சந்தித்து தங்கள் பகுதியில் நியாய விலை கடை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அதனை ஏற்று அந்த பகுதிக்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்து, புதிய நியாய விலை கடை அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார். உடன் இந்நிகழ்வில் பொன்மலை பகுதி கழக செயலாளர் தர்மராஜ் மற்றும் வட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர் .