மெக்கானிசம், வேலை வாய்ப்புடன் ஓட்டுனர் பயிற்சி அளிக்கும் அபிராமி டிரைவிங் ஸ்கூல்.மேயர் அன்பழகன் தொடங்கி வைத்தார்.
திருச்சி உழவர்சந்தை மைதானம் அருகில் உள்ள அபிராமி டிரைவிங் ஸ்கூல் புதிதாக வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது.
இந்த வேலை வாய்ப்புடன் கூடிய 2 மாத பயிற்சி திட்டத்தினை திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
டாடா மோட்டார், ராசி கார்ஸ் நிர்வாக மேலாளர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அபிராமி டிரைவிங் ஸ்கூல் நிர்வாக இயக்குனர் பூங்கொடி சுப்பிரமணியன் பத்திரிகையாளர்களிடம் கூறிய போது:
தமிழ்நாட்டில் முதல்முறையாக 2 மாதங்களில் டிரைவிங் கற்று கொடுத்து உடனடியாக வேலைவாய்ப்பு பெறும் வகையில் பயிற்சியும் அளிக்கிறோம்.
டிரைவிங் மட்டுமல்லாமல், மெக்கானிசம் குறித்தும் ஒரு மாதம் ஒர்க்ஷாப் பயிற்சியும் கொடுக்கிறோம்.
இதன் மூலம் குறுகிய காலத்திலேயே சிறந்த தொழில்முறை ஓட்டுனராக முடியும் என்று கூறினார்.