
தேசிய அளவிலான தற்காப்பு கலைகளுக்கான போட்டிகள்
நாகர்கோவிலில் நடைபெற்றது.
இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்ட குழுப்போட்டியில்
சிலம்பம் பிரிவில் திருச்சி உறையூர் முத்தமிழ் சிலம்பக்கூடம் முதல் இடத்தை வென்றதுடன் பதினைந்தாயிரம் ரொக்க பரிசையும் வென்றது.
மேலும் இதே பள்ளியை சார்ந்த திலகா, சங்கரன், குருசரண், முகிலன், ஷெரின் ஆகியோர் தங்க பதக்கத்தையும், மேலும் குழு போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களை வென்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள் தங்ளுக்கு பயிற்சியளித்த சிலம்ப ஆசிரியர் மாஸ்டர்.பா.சரவணனுக்கு நன்றி தெரிவித்தனர்.

