திருச்சி அரியமங்கலத்தில்
மீன் வியாபாரியிடம் கத்தி முனையில் மிரட்டி பணம் பறித்த
வாலிபர் கைது.
திருச்சி வடக்கு காட்டூர் அண்ணாநகரை சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவரது மகன் நூருல் பக்ருதீன் (வயது 31). இவர் மீன் கடை வைத்துள்ளார்.

இவர் ஆயில் மில் ரோட்டில் மீன் கடை முன்பு நின்று கொண்டிருக்கும்போது கத்திமுனையில் இவரிடம் ஒரு வாலிபர் மிரட்டி பணத்தை பறித்தார் .
இதுகுறித்த புகாரின் பெயரில் அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து, தாஜூதீன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.