திருச்சி பஞ்சப்பூர் முதல் கருமண்டபம் புறவழிச்சாலை அடுத்த ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்: மேயர் அன்பழகன்.
திருச்சி பஞ்சப்பூர் முதல் கருமண்டபம் வரை. ரூ.81.72 கோடி செலவில் புறவழிச்சாலை அமைக்கும் பணி
அடுத்த ஆண்டு
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என மேயர் அன்பழகன் தகவல்..
திருச்சி பஞ்சப்பூர் முதல் கருமண்டபம் வரை புறவழிச்சாலை தொகுப்பு-கோரையாறு மற்றும் உய்யகொண்டான் ஆறு கிழக்கு கரை பகுதியில் புறவழிச்சாலை அமைக்கும் பணி ரூ.81.72 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை பஞ்சப்பூர் முதல் கருமண்டபம் வரை அமைக்கப்படுகிறது.
சாலையின் மொத்த நீளம் – 2 கிலோமீட்டர்
சாலை கட்டமைப்பு 2 வழி சாலைகள்,
சாலையின் அகலம் 10 மீட்டர்
தரைமட்ட சாலை நீளம் – 0.990 கிலோமீட்டர்,
உயர்மட்ட சாலை நீளம் – 1.370 கிலோமீட்டர்,
இரயில்வே உயர்மட்ட சாலை – 0.06409 கிலோமீட்டர் ,
தாங்குசுவர் நீளம் – 2.250 கி.மீ. (சாலையின் இரு பகுதிகளிலும்)
நடைபாதையுடன் கூடிய மழைநீர் வடிகால் அமைப்பு – 1.290 கி.மீ.
இத்திட்டப்பணி 2026 ம் ஆண்டு முடிவுற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என மேயர் அன்பழகன் தெரிவித்தார்.
இந்த ஆய்வில் பொன்மலை மண்டல தலைவர் ,துர்கா தேவி ,மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

