Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

காருக்குள் பிணமாக கிடந்த டிராவல்ஸ் அதிபர். கொலையா? போலீசார் விசாரணை .

0

'- Advertisement -

திருச்சி அரியமங்கலத்தில் பரபரப்பு.

காருக்குள் பிணமாக கிடந்த டிராவல்ஸ் அதிபர்

 

உடலை கைப்பற்றி அரியமங்கலம் போலீசார் விசாரணை.

 

திருச்சி மாவட்டம் லால்குடி ஆங்கரை மலையப்பபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் பிரவீன் குமார் (வயது 31 ) இவர் டிராவல்ஸ் நடத்தி வந்தார்.இவர் நேற்று வேலை விஷயமாக திருச்சி அரியமங்கலம் வந்தார். அரியமங்கலம் லட்சுமிபுரம் பஸ் ஸ்டாப் அருகில் காரை நிறுத்தி இருந்தார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.அங்கு அந்த கார் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. இதை பார்த்த அப்பகுதி பொது மக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அரியமங்கலம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் எழில் நிலவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரை சோதித்தனர். காருக்குள் பிரவீன் குமார் மூக்கு, காதில் ரத்தம் வந்த நிலையில் பிணமாக கிடந்தார் .உடனே அவரை மீட்டு போலீசார் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது தாய் காளியம்மாள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அரியமங்கலம் காவல் நிலையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

 

இது கொலையா? , தற்கொலையா? அல்லது இயற்கை மரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.