வீட்டு உபயோக சிலிண்டர்களை பயன்படுத்தியதாக
திருச்சி ஓட்டல் உரிமையாளர் மீது வழக்கு பதிவு.
திருச்சி கோட்டை போலீஸ் சரகம் நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வணிக சிலிண்டரை பயன்படுத்தாமல் வீட்டு உபயோக சிலிண்டரை பயன்படுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கோட்டை காவல் நிலையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திவ்யபிரியா தலைமையிலான போலீசார் அந்த ஹோட்டலுக்கு சென்று சோதனை நடத்தினர் .
சோதனையின் முடிவில் வீட்டு உபயோக சிலிண்டரை அக்கடையில் பயன்படுத்தியது உறுதியானது.
இதையடுத்து ஹோட்டல் உரிமையாளர் முகமது உசேன் என்பவர் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.
பின்னர் அவர் காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டார். ஹோட்டலில் இருந்து இரண்டு வீட்டு உபயோக சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.