திருச்சியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ரூ.5.9 லட்சம் மதிப்புள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனங்களை வழங்கினார் .
திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் 2024-2025 ஆம் நிதியாண்டிற்கான நிதியில் இருந்து மாற்றத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கப்பட்டது.
மாற்றந்திறனாளிக்கு மொத்தம்
ரூ 1101,800/- நிதியிலிருந்து சட்டமன்ற தொகுதிக்கு உப்பட்ட 5 நபர்களுக்கு
ரூ 5,09,000/- மதிப்பிட்டில் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களால் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மண்டலம் மூன்றின் தலைவர்
மு.மதிவாணன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் கருணாநிதி, கங்காதரன், மாமன்ற உறுப்பினர்கள் நீலமேகம், செந்தில், சிவக்குமார், ரெக்ஸ்
இரா. இரவிச்சந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், சா. இராமன் முடநீக்கியல் வல்லுனர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.