Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இறால் பண்ணையில் ரூ.111 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட வந்தவர் கைது .

0

'- Advertisement -

 

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே இறால் பண்ணையில் ரூ.111 கோடி மதிப்பில் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டவா் மத்திய சுங்கத் துறையினரால் கைது செய்யப்பட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி. பட்டினத்தைச் சோ்ந்தவா் அமீா் சுல்தான். இவா், புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே வேங்காங்குடியில் கடற்கரையோரம் இறால் பண்ணை ஒன்றை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தாா்.

இந்தப் பண்ணையில் இருந்து ரூ.111 கோடி மதிப்புள்ள 100 கிலோ ஆஷிஷ் மற்றும் 876 கிலோ கஞ்சா ஆகிய போதைப் பொருள்களை கடந்த மாா்ச் 10-ஆம் தேதி திருச்சி சுங்கத் துறை நுண்ணறிவுப் பிரிவினா் பறிமுதல் செய்தனா்.
அமீா் சுல்தான் தலைமறைவானாா்.

இதன் தொடா்ச்சியாக இறால் பண்ணை அமைந்துள்ள இடம் அரசுப் புறம்போக்கு நிலம் எனக் கூறி ஆவுடையாா்கோவில் வருவாய்த் துறையினா், போதைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கிடங்கு மற்றும் இறால் பண்ணைக்கான இடங்களை இடித்து, தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்தனா்.

இந்நிலையில் தலைமறைவான அமீா்சுல்தானை திருச்சியைச் சோ்ந்த சுங்கத் துறையினா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

முதல் கட்ட விசாரணைக்குப் பிறகு, புதுக்கோட்டை போதைப் பொருள் தடுப்பு மற்றும் அத்தியாவாசிய பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் அமீா்சுல்தானை நேற்று காலை ஆஜா்படுத்தினா்.

அவரை மே 9-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி பாபுலால் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, அமீா்சுல்தான் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.