தொகுதியின் வளர்ச்சிப் பணிகளைத் தொய்வின்றித் தொடர உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். அமைச்சர் கே.என்.நேரு பொன்னகர் பகுதி செயலாளர் மோகன்தாஸ் உடன் தீவிர பிரச்சாரம் .


உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு
திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், கழக முதன்மைச் செயலாளருமான அமைச்சர் கே.என்.நேரு தனது தொகுதியில் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மேற்கு சட்டமன்ற தொகுதி பொன்னகர் பகுதிக்கு உட்பட்ட ஒத்தக்கடை, முத்தரையர் சிலை,
குதுப்பாபள்ளம்,
வில்லியம்ஸ் ரோடு,
கலைக்காவிரி சாலை,
வார்னர்ஸ் ரோடு, ஜங்ஷன்
வெஸ்டரி பள்ளி பகுதி,
நியூ ராஜா காலனி,
கான்வென்ட் ரோடு, ஜங்ஷன்
ரயில்வே காலனி,
ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

.இந்த பிரச்சாரத்தின் போது திமுக அரசு மக்களுக்காகச் செய்துள்ள நலத்திட்டங்களையும், சாதனைகளையும் பட்டியலிட்டுப் பேசிய கே.என்.நேரு, தொகுதியின் வளர்ச்சிப் பணிகளைத் தொய்வின்றித் தொடர உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
இந்தப் பிரசாரத்தின் போது பொன்னகர் பகுதி செயலாளர் மோகன்தாஸ் மற்றும் ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

