Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பிரதிபா கொலைக்கு நீதிவேண்டி திருச்சியில் யாதவ சங்கங்கள் போராட்டம்.

0

'- Advertisement -

பிரதிபா கொலைக்கு நீதிவேண்டி திருச்சியில் யாதவ சங்கங்கள் போராட்டம்.

தூத்துக்குடி +2 மாணவி பிரதிபாவின் படுகொலைக்கு நீதி வேண்டி ஆர்ப்பாட்டமும் அவரது உருவப் படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் திருச்சி மாவட்ட அனைத்து யாதவ சங்கங்களின் சார்பில் நேற்று 15.03.2026 மாலை திருச்சியில் எடத் தெருவில் நடைபெற்றது.

இந்த நிகழ்வுகளுக்கு யாதவ மகாசபை மாவட்ட தலைவர் தங்கராஜ், முல்லை மக்கள் இயக்க மாவட்ட தலைவர் பா.ஸ்ரீதர் ஆகியோர் தலைமை தாங்கினர்.

யாதவ இளைஞரணி நிர்வாகிகள் எஸ்.சரவணன் , எஸ்.சேதுராமன் பி.எஸ்.கே.. கண்ணன் ,எஸ்.கோபி ஆறுமுகம் ,இராமநாதன், பார்த்தசாரதி,ரகுராம், வெங்கடேஷ், சேது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எடத்தெரு லோ. முத்துகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார்.

முதல் நிகழ்வாக பிரதீபா திருஉருவபடத்திற்கு முன்புறம் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாரத முன்னேற்றக் கழகத் தலைவர் பாரதராஜா யாதவ்,

தமிழ்நாடு-புதுச்சேரி யாதவ சங்க ஒருங்கிணைப்பாளர் திருவேங்கடம் யாதவ்,மீசை வெங்கடாசலம்,

வழக்கறிஞர கெள்சல்யா,பிற்படுத்தப்பட்டோர் இயக்கம். நீலமேகம் யாதவ், வாசுதேவன்,. எல்.ஐ.சி.முருகானந்தம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

அப்போது ,மாணவி பிரதீபாவை கொன்ற கயவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷம் எழுப்பினர்.

போராட்டத்தில் பல்வேறு யாதவ சங்க நிர்வாகிகள் எம்.ஆர்.இராமச்சந்திரன்,வினோத் பாண்டி,என்.பார்த்திபன்,டைமன் தாமோதரன் சி.முத்தையன், ஆயில் சீனிவாசன்,சுந்தர், ஆசைத்தம்பி,ரேணுகா தேவி,செந்தில் முருகன்,தேக்க பெருமாள் டி.வி.கோவில் விஜ்ய், இராமச்சந்திரன் மற்றும் எடத்தெரு,ஸ்ரீரங்கம் மருங்காபுரியை சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

முடிவில் பார்த்தசாரதி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.