திருச்சியில் சவுக்கு மரத்தில் தூக்கு போட்டு முதியவர் தற்கொலை .
போலீசார் விசாரணை .
திருச்சி கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 59 ) இவர் சக்கரை நோயால் பாதிக்கப்பட்ட கால் எரிச்சலில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் கடந்த ஏழாம் தேதி கால் எரிச்சல் அதிகமாக ஏற்பட்டதால் மனம் உடைந்த ஆறுமுகம் வீட்டில் அருகில் உள்ள சவுக்கு மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து செசன்ஸ் கோர்ட் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆறுமுகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
இந்த சம்பவம் குறித்து செசன்ஸ் கோர்ட்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

