மு.க.ஸ்டாலினை மீண்டும் முதல்வர் ஆக்குவோம் :
சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு.
பெருந்தொகையை எதிர்பார்த்து இந்திய சோசியலிஸ்ட் கட்சி மாநில பொதுச் செயலாளர் பேட்டி
இந்திய சோசியலிஸ்ட் கட்சி மாநில பொதுச் செயலாளர் டாக்டர். தமீமுல் அன்சாரி ரஹ்மானி திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று சனிக்கிழமை பத்திரிகையாளர்களை பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சுயமரியாதை, சமத்துவம்,சமூக நீதி, மதச்சார்பின்மை,மொழி உரிமை கொள்கைகளை சட்டமாக்கி பெரியார், அண்ணா ஆகியோரின் கனவுகளை நினைவாகிய கருணாநிதியின் வாரிசாக விடியலின் வேந்தராக நல்லாட்சி நடத்தி வரும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் ஆட்சி தொடர இந்திய சோசியலிஸ்ட் கட்சி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு முழு ஆதரவை அளிக்கிறது.
மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராக நாங்கள் முழு பலத்துடன் செயல்படுவோம்.திமுக மீது அவதூறுகளை இட்டுக்கட்டி திரைக்கதை எழுதும் புதிய நடிகர்களையும்,நீலி கண்ணீர் வடிக்கும் உலக மகா நடிகர்களையும் வீழ்த்துவோம் . திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற அயராது உழைப்பது என எங்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு எடுத்துள்ளோம் திராவிட இயக்கத்தில் வளமான ஆட்சியின் அடையாளமாக விளங்கும் மு.க.ஸ்டாலின் தூய தொண்டு தொய்வின்றி தொடரட்டும் அதற்கு நாங்கள் பக்கபலமாக இருப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது நிர்வாகிகள் முனைவர் அப்துல் ரகுமான், முருகு தேவி நாச்சியார், எம். ஆர். மெகராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுகவுக்கு ஆதரவாக பேட்டி அளித்தால் பெருந்தொகையை பெறலாம் என்ற நோக்கத்தில் கடந்த நான்கு வருடமாக திமுக ஆதரவாக எந்த பேட்டியும் நிகழ்ச்சியும் நடத்தாத இவர் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசி இருப்பது பெரும் தொகையை பெறுவதற்காக தான் என திமுகவினரே கூறி வருகின்றனர்.
இது போன்ற பல புதிய லெட்டர் பேட் கட்சிகள் பணத்துக்காக இனி வரத்தான் செய்யும் எனவும் கூறினார்.

