திருச்சியில் வடமாநில கள்ள நோட்டு கும்பல் கைது .
ரூபாய் 9 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல்.
நேற்று இரவு திருச்சி துவாக்குடி கருப்பு கோவில் அருகே
செயல்படும் பெட்ரோல் பங்கில்
மகாராஷ்டிரா பதிவு எண் கொண்ட காரில் வந்த இருவர் காருக்கு
பெட்ரோல்
போட்டுவிட்டு 200 ரூபாய் கள்ள நோட்டை கொடுத்துவிட்டு சென்று உள்ளனர்.
இது குறித்து பெட்ரோல் பங்க் ஊழியர்கள் துவாக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்து உள்ளனர்.
இந்த தகவலின் பேரில் போலீசார் மஞ்சத்திடல் செக்போஸ்ட்டில்
வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த காரை வழிமறித்து சோதனை செய்தனர்.
அதில் 40 பண்டல்களில்
200 ரூபாய் கள்ள நோட்டுகள்
இருந்தது கண்டறியப்பட்டது.
இதன் மொத்த மதிப்பு 8.86 லட்சம் ரூபாயாகும்.
அவை அனைத்தும் கள்ள நோட்டு என தெரிய வந்ததை தொடர்ந்து
துவாக்குடி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் காரில் வந்த இருவரும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த
ரமேஷ் பாபு ராவ்,
நாராயணன் என்பது தெரிய வந்தது.

இதன் பின்னர் இருவரும் சிபிசிஐடி பிரிவு கள்ளநோட்டு தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட் தாக கூறப்பட்டுள்ளது.

