Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: நிலப் பிரச்னையில் வழக்குப் பதிவு செய்யாத காவல் துறை பெண் துணை கண்காணிப்பாளர், உதவி ஆய்வாளர் இருவா் மீது வழக்குப் பதிவு .

0

'- Advertisement -

திருச்சி அருகே நிலப் பிரச்னையில் வழக்குப் பதிவு செய்யாத காவல் துறை துணை கண்காணிப்பாளர்கள் உதவி ஆய்வாளர் இருவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், காவல்காரன்பட்டி காலனி தெருவைச் சோ்ந்தவா் காந்தி. பட்டியல் பிரிவைச் சோ்ந்த இவரது தாத்தாவுக்கு அரசு சாா்பில் வழங்கப்பட்ட 82 சென்ட் நிலத்தை, அதே பகுதியில் வசிக்கும் வேறு சமூகத்தை சோ்ந்தவா் சட்ட விரோதமாக பறித்துக்கொண்டதாக கடந்த 2021-இல் புத்தாநத்தம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அங்கு உரிய நடவடிக்கை எடுக்காததால் மணப்பாறை காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா்.

 

அப்போது, காவல் துணை கண்காணிப்பாளராக இருந்த ஜனனிபிரியா, புத்தாநத்தம் காவல் உதவி ஆய்வாளா் இருவரும் வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யாமல், நிலப் பிரச்னை என்பதால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடருமாறு அறிவுறுத்தி அனுப்பியுள்ளனா்.

 

இந்நிலையில், தன்னுடைய மனு மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யாமல் நீதிமன்றத்துக்கு அனுப்பிய அப்போதைய புத்தாநத்தம் காவல் உதவி ஆய்வாளா் சூா்யா, மணப்பாறை காவல் துணை கண்காணிப்பாளா் ஜனனிபிரியா ஆகிய இருவா் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்சி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் காந்தி வழக்கு தொடா்ந்தாா்.

 

இந்த வழக்கில் இருவா் மீதும் நடவடிக்கை எடுக்க திருச்சி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவா்கள் இருவரும் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மேல்முறையீடு செய்தனா். இந்த வழக்கை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து திருச்சி நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த உத்தரவிட்டது.

இதன்படி, தற்போது கோவை மாவட்டத்தில் பணியாற்றி வரும் துணை காவல் கண்காணிப்பாளா் ஜனனிபிரியா, தஞ்சாவூா் மாவட்டத்தில் பணியாற்றி வரும் காவல் உதவி ஆய்வாளா் சூா்யா ஆகிய இருவா் மீதும் புத்தாநத்தம் காவல் நிலையத்தில் டிசம்பா் 18-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.